ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கின்றோம் நின்னடியார்
திருநாமத்தின் ஆதரவில்
வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஒய்வின்றிப் பாடி துதிக்க மாபெரும்
மன்னவனே உமக்கு
நின் உதிரமதினால் திறந்த
நின்ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கும் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்
இத்தனை மகத்துவமுள்ள பதவி
இப்புழுக்களாம் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின்கிருபை
எத்தனை ஆச்சரியம்
இன்றைத் தினமதிலும் ஒருமித்து
கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
நீரல்லால் எங்களுக்கு பரலோகில்
யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறோரு
தேற்றமில்லைப் பரனே