சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய்
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற
திரித்துவமே – எத்தால் நானடியேன்
கடைத்தேறுவன் என் பாவந் தீர்ந்து
அத்தா, உன்னையல்லாமல்
எனக்கார் துணை, யாருறவே
எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்
கைம்மாறுண்டுகொலோ
கடைகாறுங் கையடையாய்
சும்மா ரட்சணைசெய்
சொல்சுதந்தரம் யாதுமிலேன்
அம்மான் உன்னையல்லால்
எனக்கார்துணை யாருறவே
திரைசேர் வெம்பவமாம் கடல்
மூழ்கிய தீயரெமைக் கரைசேர்த்
துய்க்கவென்றே புணையாயினை
கண்ணிலியான் பரசேன் பற்றுகிலேன்
என்னைப் பற்றிய பற்றுவிடாய்
அரசே உன்னையல்லால்
எனக்கார்துணை யாருறவே
தாயே தந்தை தமர் குரு சம்பத்து
நட்பெவையும் நீயே எம்பெருமான்
கதி வேறிலை நிண்ணயங்கான்
ஏயே என்றிகழும்
உலகோடெனக் கென்னுரிமை
ஆயே உன்னையல்லால்
எனக்கார் துணை யாருறவே
பித்தேறிச் சுழலும் ஜெகப்பேய்பிடித் துப்பவத்தே
செத்தேன் உன்னருளால் பிழைத்தேன்மெறு ஜென்மம தாய்
எத்தோஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்று
அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்
தப்பாதே வெளியா நடுநாலெனைத் தாங்கிக்கொள்ள
இப்பாருய்யவென்றே மனுக்கோல மெடுத்த் எங்கள்
அப்பா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே