நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன் -2
அவரே எனது வாழ்வின் பெலனானார்-2
யாருக்கும் அஞ்சிடேன் அல்லேலூயா -2
கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார் -2
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் -2
கலக்கம் எனக்கில்லை அல்லேலூயா -2
தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார் -2
கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் -2
புது பெலன் பெற்றிடுவேன்-2