ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவே
உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்
வல்ல கர்த்தாவினுடைய தூய ஆட்டுக்குட்டியே
நீரே என்றும் என்னுடைய ஞான மணவாளனே
உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்
என் பிரார்த்தனையைக் கேளும் அத்தியந்த பணிவாய்
கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்
உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்